எஸ்.ஜே. சூர்யாவின் அன்பே ஆருயிரே படம் மூலம் நடிகையானவர் மீரா சோப்ரா. பிரபல பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவின் சகோதரி.

அவர் தன்னை முன்களப் பணியாளர் போன்று காட்டிக் கொண்டு தடுப்பூசி போட்டதாக பாஜக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மீரா சோப்ரா விவகாரம் குறித்து தானே முனிசிபால் கார்பரேஷன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மீரா தன்னை முன்களப் பணியாளராக காட்டிக் கொண்ட போலி அடையாள அட்டை ட்விட்டரில் வெளியானது.

இந்நிலையில் இது குறித்து மீரா சோப்ரா விளக்கம் அளித்துள்ளார்.

சமூக வலைதளத்தில் வலம் வரும் அடையாள அட்டை என்னுடையது அல்ல. என் பெயரை பதிவு செய்ய ஆதார் கார்டு மட்டும் தான் கேட்டார்கள். அது மட்டும் தான் நான் கொடுத்தேன். நம் கையெழுத்தில்லாமல் எந்த அடையாள அட்டையும் செல்லாது. ட்விட்டரில் வலம் வந்த அடையாள அட்டையை நானே முதல் முறையாக பார்க்கிறேன் என கூறியுள்ளார் .

மீராவின் சகோதரர்கள் இருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் அண்மையில் உயிரிழந்தனர். அவர்களின் மரணத்திற்கு மருத்துவத்துறை உள்கட்டமைப்பு சரியில்லாதது தான் காரணம் என்றார் மீரா சோப்ரா.