ரோடு

சீமான் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அவதூறாகப் பேசியதாக ஈரோடு நீதிமன்றம் சம்மன் அளித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி அன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு திருநகர் காலனியில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்துப் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. சீமானின் பேச்சுக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள்.

காவல்துறையினர் பிரசார பொதுக்கூட்டத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினரையும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களையும் அவதூறாகப் பேசியதாக சீமான் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேற்கண்ட வழக்கில் விசாரணைக்காக, ஈரோடு மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் வருகிற 11-ந்தேதி ஆஜராகும்படி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குச் சம்மன் அனுப்பியது. நேற்று திருப்பூரில் இருந்த சீமானிடம், ஈரோடு கருங்கல்பாளையம் காவல்துறையினர் இந்த சம்மனை வழங்கினர்.