திண்டுக்கல்:
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கொடைக்கானலுக்கு வரும் வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


தமிழகம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதையடுத்து புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா எல்லைகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கோவை, கேரளா எல்லையில் முக்கியமான 13 சோதனைசாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கேரளா, மகராஷ்டிராவில் இருந்து கொடைக்கானலுக்கு வரும் இ-பாஸ் இல்லாத சுற்றுலா வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.