சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிக்கு ’டிபன் பாக்சில்’ சரக்கு
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முத்துக்குமார் என்பவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முத்துக்குமாரின் மனைவி கலைமங்கை, பை ஒன்றில் கணவருக்கு உணவு கொண்டு வந்து கொடுத்துள்ளார்.
டிபன் பாக்ஸில் , கலைமங்கை ‘சரக்கு’ பாட்டில் ஒன்றையும் ரகசியமாக மறைத்து வைத்திருந்தார்.
சரக்கு அருந்திவிட்டு, முத்துக்குமார் , அந்த வார்டில் ரகளை செய்துள்ளார்.
இது குறித்து மற்ற நோயாளிகள் மருத்துவமனை ஊழியர்களிடம் புகார் செய்தனர். அப்போது, முத்துக்குமார் மிதமிஞ்சிய போதையில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
கிராம நிர்வாக அலுவலர், இது குறித்து அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார், கணவன் –மனைவி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அளவுக்கு அதிகமாகக் குடித்து விட்டு, கலாட்டா செய்த பின்னரே, குடிகார கொரோனா நோயாளிக்கு, ’அன்பு’ மனைவி மது பாட்டில் வாங்கி வந்த தகவல் அம்பலமாகியுள்ளது.
-பா.பாரதி.