டெல்லி: 5 மாநில தேர்தல் தோல்வியால் குறித்து விவாதிக்க விரைவில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் கூடும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா தெரிவித்து உள்ளார்.

தேசிய அளவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்து வருகிறது. தற்போது நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலிலும் பெரும் தோல்வி அடைந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தையும் இழந்துள்ளது. தற்போது ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கரில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி இருந்து வருகிறது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. தொடர் தோல்வி காரணமாக, கட்சியின் அதிருப்தி மூத்த தலைவர்கள் இன்று மீண்டும் ஆலோசனை நடத்துகின்றனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு சோனியா காந்தி தலைமையில் விரைவில் கூடும் என்று அக்கட்சியின்  பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறியுள்ளார்.