சென்னை

ன்று மாலை 3 மணிக்கு  வங்கிக் கணக்கு முடக்கத்தை எதிர்த்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.

தமிழக காங்கிரஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில்,

 ”அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் வங்கிக் கணக்கை வருமான வரித்துறை மூலம் முடக்கிப் பழிவாங்கும் செயலில் ஈடுபட்ட பா.ஜ.க. அரசை கண்டித்து சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ். ராஜேஷ்குமார் முன்னிலையில் சென்னை, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் 19.02.2024  திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். 

சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் எம்.எஸ். திரவியம், சிவ. ராஜசேகரன், ரஞ்சன்குமார், ஜெ. டில்லிபாபு, முத்தழகன், அடையாறு த. துரை ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்து நடத்துவார்கள். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், செயல் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி  அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்பார்கள்.” 

என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.