சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் 7ம் தேதி காங்கிரஸ் எம்எல்ஏ கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ்.அழகிரி அறிவித்து உள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 25 தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 18 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.  18 சட்டமன்ற தொகுதிகளுடன் குமரி பாராளுமன்ற தொகுதியையும் காங்கிரஸ் கட்சி ‘வென்று சாதடின படைத்துள்ளது.

இதையடுத்து வரும் 7ந்தேதி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என தமிர்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சஞ்சய் தத், டாக்டர் சிரிவெல்ல பிரசாத் ஆகியோர்  முனிலையில், புதியதாக தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள்  கூட்டம் வருகிற 7ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.