சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பேசினார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இதில் 21 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 4 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில்,  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான  சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்து, தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.  அவருடன் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர்கள் இராம.சுகந்தன், கே.வி.தங்கபாலு உள்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி, அப்போது, இந்த தேர்தல் அறிக்கையானது இது எஜமானர்களுக்கான தேர்தல் அறிக்கை அல்ல… அடித்தட்டு விளிம்புநிலை மக்களுக்கான தேர்தல் அறிக்கை  என கூறினார்.  இந்த தேர்தல் அறிக்கையில் 26 தலைப்புகளின் கீழ் வாக்குறுதிகள்  வழங்கப்பட்டுள்ளன.