maxresdefault
திரைப்படம் எடுக்க வேண்டும் என்றால்,  இயக்குநர்களிடம் வருடக்கணக்காக குருகுல பாடம் பயில வேண்டும் என்கிற கான்செப்டை உடைத்தவர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.  மூளை இருந்தால் போதும், குறும்படம் எடுத்தும் தம்மை நிரூபிக்கலாம்.. அதன் மூலம் பெரிய திரைக்கும் வரலாம் என்று புதுப்பாதை திறந்தவர் இவர். 
பீட்சா, ஜிகர்தண்டா என அடுத்தடுத்து இயக்கிய இரண்டு படங்கள் மெகா ஹிட்!  அதே நேரம் அந்த இரண்டாவது படத்திலேயே தயாரிப்பாளருடன்  “உரிமை” பிரச்சினை ஏற்பட்டுவிட்டது.
“படைப்பாளிக்கான உரிமையை விட்டுக்கொடுக்காமல் போராடுகிறவர்” என்கிற இமேஜ் இவருக்கு ஏற்பட்டது என்றாலும், தாயாரிப்பாளருக்கு எதிரானவர் என்று சிலர் இவருக்கு முத்திரை குத்த முயன்றனர். ஆனால் இவரது முதல் படமான  “பீட்சா” தாயாரிப்பாளரே, மீண்டும் இவரை வைத்து இறைவி படத்தை எடுத்தார்.
இந்த நிலையில், அடுத்ததாக தனது சொந்தத் தயாரிப்பில் படம் எடுக்கப்போகிறாராம் கார்த்திக் சுப்புராஜ்.
நல்ல படைப்பாளியான கார்த்திக் சுப்புராஜ், தயாரிப்பாளராகவும் வெல்ல வாழ்த்துகள்.!