கோவை:

இரு சக்கர வாகனம் மீது கார் மோதியது தொடர்பாக இந்துமுன்னணி அமைப்பினருக்கும் பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் அரிவாள் வெட்டுவரைச் சென்றது. இது தொடர்பாக 6 பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த பெண்  மீது அந்த வழியாக வந்த கார் மோதியதாக கூறப்படுகிறது.  காரை ஓட்டி வந்தவர் இந்துமுன்னணியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அவருக்கு ஆதரவாக சிலர் திரண்ட நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணுக்கு ஆதரவாக பாஜகவினரும் களத்தில் குதித்தனர்.

‘இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல் அரிவாள், கம்புகளாலும் தாக்கிக்கொண்டனர். இதில்,  ந்து முன்னணியைச் சேர்ந்த கார்த்திக், ஜெரால்ட், ஹரீஷ் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, வெட்டுபட்டவர்களை கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதித்தனர். அவர்கள் கொடுத்த புகாரின்பேரில்,  பாஜகவை சேர்ந்த அசோக், ராசு, சண்முக சுந்தரம் , சச்சு உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

ஏற்கனவே இவர்களுக்குள் முன் விரோதம் இருந்ந்து வருவது  விசாரணையில் தெரியவந்துள்ளது.