விருதுநகர்:  விருதுநகர் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில், எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் பாஜக சின்னம் பதிவாவதாக புகார் எழுந்துள்ளது. அதையடுத்து, அங்கு வாக்குப்பபதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று  காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாபலை 7 மணி வரை நடைபெறுகிறது, தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் வாக்குப்பதிவு சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெறுவதுடன், பல இடங்களில் இரட்டை இலைக்கு வாக்குகள் பதிவாவதாகவும், தாமரைக்கு பதிவாவதாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில்,  விருதுநகர் சத்ரியா பள்ளி வாக்குச்சாவடியில் எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் பாஜக சின்னம் பதிவாவதாக வாக்காளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு வாக்கு இயந்திரத்தை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.