சென்னை

மிழகத்தில் கோயில்கள் பராமரிப்பை மேம்படுத்த முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து இந்து சமய அறநிலையத் துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.   ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பல கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.   கோவில்களின் பராமரிப்பை மேம்படுத்தப் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவ்வகையில் தமிழகத்தில் கோவில்களின் பராமரிப்பை மேம்படுத்தவும் பக்தர்கள் வசதியை மேம்படுத்தவும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.  இந்த குழு தமிழக முதல்வர் தலைமையில் இயங்க உள்ளது.   இந்த குழு கோவில்களின் பராமரிப்பை மேம்படுத்தவும் பக்தர்களின் வசதியை அதிகரிக்கவும் ஆலோசனைகள் வழங்க உள்ளன.

இந்த குழுவில் துணைத்தலைவராகத் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.   இந்த குழுவில் 17 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களில் அறநிலையத்துறைச் செயலர், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சுகி சிவம் உள்ளிட்டோர் அடங்குவர்.