சென்னை,

நிலம் வாங்கியதில் தன்னை சிங்கமுத்து மோசடி செய்துவிட்டார் என்று நடிகர் வடிவேல் அவர்மீது புகார் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது இருவரும் சமரசம் செய்துகொள்வதாக கூறியுள்ளனர்.

கடந்த 2010ம் ஆண்டு தாம்பரம் இரும்புலியூர் அருகே நிலம் வாங்கியதில் தன்னை ஏமாற்றி விட்டதாக சிங்கமுத்து உள்ளிட்ட 6 பேர் மீது நடிகர் வடிவேல் புகார் கூறியிருந்தார்.

இந்த புகார் குறித்த வழக்கை ரத்து செய்யக்கோரி சிங்கமுத்து உள்ளிட்டோர் எதில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு காரணமாக இருவரையும் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஏற்கனவே பலமுறை  உத்தரவிட்டும் அவர்கள் ஆஜராகாததால், இன்றைய விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மாலை விசாரணைக்கு வருகிறது. வழக்கு விசாரணைக்கு இருவரும் ஆஜராக முடிவு செய்துள்ளனர். அப்போது தாங்கள் இருவதும் இந்த வழக்கில் சமரசம் செய்துகொள்வதாக கோர்ட்டில் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக வழக்கு முடித்து வைக்கப்படும் என தெரிகிறது.