சென்னை: கடந்த ஆண்டு தமிழகத்தை உலுக்கிய கோவை கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக கோவை திமுக கவுன்சிலர் வீடு மற்றும் சென்னையின் பல்வேறு இடங்கள் உள்பட  30 என் ஐ ஏ அதிரடி சோதனை நடத்தி வருகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2022ம் ஆண்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி கோவை மாவட்டம் உக்கடத்தின் கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே ஒரு கார் வெடித்துச் சிதறியது. காரை ஓட்டி வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபின் (வயது 28) என்பவர் உயிரிழந்தார். கோவையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பானது. இந்த சம்பவத்தை என்ஐஏ அதிகாரிகளில் விசாரணை நடத்தி வருகின்றன. அவர்களின் விசாரணையில், கோவையில் உயிரிழந்த ஜமேஷா முபின், ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர். காரில் வெடி பொருட்களை நிரப்பி, மதப் பிரச்சினையை உருவாக்கும் நோக்கில், தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததும், எதிர்பாராத வகையில் கார் சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து பயங்கரவாதி ஜமேஷாவுடன் தொடர்பில் இருந்த , சென்னை, கோவை, திருவள்ளூர், திருப்பூர், நீலகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தில் பாலக்காடு பகுதியிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  இந்த குண்டு வெடிப்பு தொடர்ந்து, உயிரிழந்த முபின் மற்றும் கைதான 6 பேரின் உறவினர்கள், நண்பர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகள், அலுவலகங்கள் என பல இடங்களில் இருந்து முக்கிய ஆவணங்களும், டிஜிட்டல் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து,  பலர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், முகமது தவ்பிக், குன்னூரைச் சேர்ந்த உமர்பாருக், பெரோஸ்கான், ஷேக் இதயத்துல்லா, சனாபர் அலி  என 10க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

 இந்த விவகாரம் குறித்து, கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்படும் விசாரணை மற்றும் அதில் கிடைக்கும் தகவல்களின் பேரில் அவ்வப்போது மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று அதிகாலை முதலில் சென்னை, கோவை உள்பட 30 இடங்களில் என்ஐஏ தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது”

கோவை பெரிய பெருமாள் கோவில் விதியில் வசிக்கும், 82வது வார்டு திமுக கவுன்சிலர் முபஷீரா வீடு  மற்றும் குறிப்பாக, உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை, ஜி.எம் நகர் உள்பட 20 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.  கவுன்சிலர் முபசீராவின் கணவர் ஆரிப்பிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுபோல் உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் தமீமூன் அன்சாரி வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும்,  சென்னையில் திருவிக நகரில் உள்ள முஜ்பீர் ரகுமான் என்பவரின் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வருகிறது.

கோவையில் உள்ள அரபிக் கல்லூரியில் பயங்கரவாத செயலுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது.  மேலும் கோவை அரபிக் கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் அதில் தொடர்புடையவர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

‘ஒற்றை ஓநாய் தாக்குதல்’: கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் திடுக்கிடும் ‘சதி’ அம்பலம்!

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான சர்ச்சைக்குரிய காகிதங்கள் பறிமுதல்!