சென்னை:  செங்கல்பட்டு மாவட்டம் பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, பசுமை நல்கை திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச்செலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  முதல்வர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டம் பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்துக்கு  அடிக்கல் நாட்டினார். கிழக்கு கடற்கரை சாலையில் பேரூரில் ரூ.4276.44 கோடி மதிப்பீட்டில் நிலையம் அமைக்கப்படுகிறது.  அதைத்தொடர்ந்து, முதலமைச்சரின் பசுமை நல்கை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன், செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரூரில் ரூ. 4,276.44 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு மாண்புமிகு முதலமைச்சர்  அடிக்கல் நாட்டி, நிலையத்தின் மாதிரி வடிவமைப்பை பார்வையிட்டார்.

பேரூரில் ரூ.4,276.44 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

அதைத்தொடர்ந்து, பசுமை நல்கை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் பசுமை நல்கை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.