சென்னை

மிழகத்தில் விஷ வண்டுகள்  தாக்குதலால் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதல்வர் மு க ஸ்டாலின் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 31/08/2023 அன்று மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், 80-ராதா நல்லூர் கிராமம், அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த வீரமணி  என்பவர் திருக்கடையூர் கிராமத்தில் மாங்காய் பறிக்கும் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது கதண்டு என்கிற விஷ வண்டுகள் தாக்கி காயமடைந்த வீரமணி திருக்கடையூர் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்யப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

இன்று முதல்வர் மு க ஸ்டாலின்,

”இந்த செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். விஷ வண்டுகள் தாக்கி உயிரிழந்த வீரமணியின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்”

எனத் தெரிவித்துள்ளார்.