சென்னை: அனைத்து  காவலர்களுக்கும் Police Commemoration Day-வில் வீரவணக்கம் செலுத்துவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காவல் பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21–ந்தேதி காவலர் வீரவணக்க நாள் (Police Commemoration Day) அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இன்று நாடு முழுவதும் காவலர் வீரவணக்க நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, அனைத்து காவலர்களுக்கும், இன்றைய நாளில் வீர வணக்கம் செலுத்துவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்,

சமூகத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உணவு – உறக்கம் – இன்ப துன்பங்களை மறந்து காவல் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட அத்தனைக் காவலர்களுக்கும் #PoliceCommemorationDay-வில் வீரவணக்கம்” என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.