சென்னை:
மிழில் சிறந்த மொழிபெயர்ப்பு செய்ததற்காக  சாகித்ய அகாதமி விருது பெறும் முனைவர் கா.செல்லப்பனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டில் சிறந்த எழுத்தாளர்கள் சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவில் சாகித்ய அகாதமி விருது  வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 2020ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில்,  தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக் கான சாகித்ய அகாதமி விருது முனைவர் கா.செல்லப்பனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ரவீந்திரநாத் தாகூரின் கோரா நாவலை மொழிபெயர்த்ததற்காக அவருக்கு சாகித்ய அகாதமி விருத அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,  சாகித்ய அகாதமி விருது பெறும் முனைவர் கா.செல்லப்பனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்,  உலக இலக்கியங்களைத் தமிழுக்கும், தமிழ் இலக்கியங்களை உலங்கெங்கும் எடுத்துச் செல்லும் அறிவுப் பண்டமாற்று என்பது பெரும்பணி – அரும்பணி என்றும், அத்தகைய அரும்பணியில், மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது, வங்கத்துக் கவிஞர் தாகூரின் புதினத்தைத் தமிழில் வடித்துள்ள முனைவர் கா.செல்லப்பன்; உலகப் பொதுமறையாம் திருக்குறளை இந்தியில் மொழிபெயர்த்துள்ள இராகவன்;  கவிஞர் சல்மா அவர்களின் இரண்டாம் ஜாமங்களின் கதை புதினத்தை மராத்தியில் மொழிபெயர்த்துள்ள சோனாலி நவாங்குள் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது! அனைத்து விருதாளர்களுக்கும் வாழ்த்துகள் – பாராட்டுகள்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.