சென்னை: நீட் விலக்கு மசோதா குறித்து இன்றுதமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைமுதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திக்க உள்ளார்.

தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் பட்ஜெட் தொடரின்போது, நீட் தேர்வு விலக்கு மசோதா கடந்த மாதம் 14-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த  நீட் விலக்கு மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக  ஏற்கனவே அனுப்பட்ட நிலையில், இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை. இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆளுநரை சந்தித்து பேச உள்ளார்.

இன்று மாலை 5மணி அளவில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் , முதல்வர் ஆளுநரை சந்தித்து  பேசுகிறார்.