நெல்லை: நடைபெற்று முடிநத 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் புதிதாகப் பிரிக்கப்பட்டதால்,  தேர்தல் நடத்தப்படாமல் இருந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான . ஊராட்சி உறுப்பினா், ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சித் தலைவா் மற்றும் ஊராட்சி வார்டு  உறுப்பினர் பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு, 12ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.

இந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்ற நிலையில்,   நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டி ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட  90 வயது மூதாட்டி பெருமாத்தாள் வெற்றி பெற்றுள்ளார். எதிர்த்து போட்டியிட்டவர்களை டெப்பாசிட்டை இழக்கச் செய்து 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக் கொண்டார்.