சென்னை: வாணி ஜெயராமின் மறைவு, இசையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல பின்னணி இசை பாடகி வாணி ஜெயராம் இன்று காலமானார். அவரது திடீர் மறைவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாணி ஜெயராம் மறைவுக்கு நாடு முழுவதும் உள்ள திரையுலகினர், அரசியல் கட்சியினர் என பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இநத் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற இசைக்குயிலாக விளங்கிய பின்னணிப் பாடகி, கலைவாணி என்ற வாணி ஜெயராம் மறைவுற்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ்நாட்டின் வேலூரில் பிறந்து உலகம் முழுக்க தமது இன்னிசையின் இனிமையால் புகழ் பெற்றவர். தமிழ் உட்பட 19 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அழியாப் புகழ்பெற்ற பாடல்களைப் பாடி, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர். இதையும் படிக்க- இருக்கூர் அருகே நடமாடும் மர்ம விலங்கால் மக்கள் அச்சம் அண்மையில் அவருக்கு ‘பத்மபூஷண்’ விருது அறிவிக்கப்பட்ட போது எனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தேன். அறிவிக்கப்பட்ட விருதைப் பெறும் முன்னரே அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்ல நேர்ந்தது பெரும் துயரை அளிக்கும் செய்தியாகும். பழம்பெரும் பின்னணிப் பாடகியான வாணி ஜெயராமின் மறைவு, இசையுலகைப் பொறுத்தவரை ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். வாணிஜெயராமை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். வாணி ஜெயராமின் மறைவு, இசையுலகைப் பொறுத்தவரை ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

வாணி ஜெயராம் கொலை செய்யப்பட்டாரா? காவல்துறை வழக்கு பதிவு…