திருச்சி

தேர்தல் நேரத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு முதல்வர் மு க ஸ்டாலின் ரூ.25 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார்.

கடந்த 30.07.2023 அன்று திருச்சி மாநகர், அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த ஸ்ரீதர்  அரிஸ்டோ ரயில்வே மேம்பாலத்தில் இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார் அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று மோதியதில் காயமுற்று அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தலைமைக் காவலர் ஸ்ரீதர் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டிருந்தார்.  முதல்வர் மு.க.ஸ்டாலின், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் “கள ஆய்வில் முதல்வர்” திட்டத்தின் கீழ், ஆய்வுப் பணிகளை முடித்துக் கொண்டு, சென்னை திரும்பினார்

அவர் தமது வழியில் திருச்சி விமான நிலையத்தில், ரூ. 25 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை மறைந்த தலைமைக் காவலர் ஸ்ரீதர் குடும்பத்தினரிடம் நேரில் சென்று வழங்கி ஆறுதல் கூறினார். இந்நிகழ்வின்போது, திருச்சி மாவட்ட ஆட்சியர் எம். பிரதீப் குமார், மாநகர காவல் துறை ஆணையர் என். காமினி ஆகியோர் உடனிருந்தனர்.