சென்னை

சென்னை புழல் சிறையில் துணை ஜெயிலரை ஒரு நைஜீரிய கைதி தாக்கி உள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இசுபா அகஸ்டின் என்ற நபர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அகஸ்டினிடம் இருந்து 2 செல்போன்கள், சிம் கார்டுகள், இயர் பட்ஸ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இசுபா அகஸ்டின் புழல் சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தார். துணை ஜெயிலர் சாந்தகுமார் சிறைக்குள் ரோந்து சென்ற போது நைஜீரிய கைதி அகஸ்டின், வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. தான் வைத்திருந்த உணவு சாப்பிடும் தட்டால் துணை ஜெயிலரை தாக்கியுள்ளார்.

அங்கிருந்த சிறைக்காவலர்கள் நைஜீரிய கைதியைத் தடுத்து சிறையில் அடைத்தனர். சாந்தகுமார் கையில் காயத்துடன் சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.  நைஜீரிய கைதி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.