சென்னை:
உ சிதம்பரம் பிள்ளை, ஒமந்தூர் பி ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் உருவப்படங்கள் சென்னை ஜார்ஜ் கோட்டையில் நாளை திறக்கப்படுகிறது.

அண்மையில் நடைபெற்ற சட்டபேரவை கூட்டத்தில் தலைவர்கள் வி.ஓ.சிதம்பரம் பிள்ளை மற்றும் ஒமந்தூர் பி ராமசாமி ரெட்டியார் மற்றும் பி சுப்பாராயண் ஆகியோரின் உருவப்படங்கள் உருவாக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து, தலைவர்களின் உருவப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த படங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை திறந்து உள்ளார் என்று தமிழக சட்டபேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அழைப்பித்தழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டபேரவை தலைவர் தலைமையில் நடக்கும் இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிப்பார் என்றும், தமிழக சட்டபேரவை செயலாளர் சீனிவாசன் நன்றியுரை ஆற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.