சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் கூறும் ஒவ்வொரு விஷயத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருவதாக திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா கூறி உள்ளார்.

சென்னை ஓட்டேரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: இந்த ஆட்சியை வழிநடத்துவது ஸ்டாலின்தான். சொந்த புத்தியில் இல்லை, ஸ்டாலின் தந்த புத்தியில் வைத்து செய்துள்ளீர்கள்.

7.5% இடஒதுக்கீடு கொடுத்தீர்கள், அது யார் கூறிய பிறகு நீங்கள் கொடுத்தீர்கள்? ஸ்டாலின் 10 % கேட்ட பின்தான் கொடுத்தீர்கள். அது போல பொங்கலுக்கு பொங்கல் பரிசு ரூ.5,000 கொடுக்க சொன்னால் தான் ரூ.2,500 கொடுப்பார் என்ற எண்ணத்தில் கோரிக்கை வைத்தோம்.

ஸ்டாலின் கோரிக்கை வைப்பதை பார்த்த பின்னர் தான் எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமே வருகிறது. அப்படி என்றால் இந்த ஆட்சியை வழி நடத்துவது ஸ்டாலின் தான் என்று பேசினார்.