சென்னை’

மிழக அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தாயார் மரணத்துக்கு முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் தாயார் அமராவதி அம்மாள் (94), வயது மூப்பு காரணமாகக் காலமானார். அவரது இறுதிச்சடங்கு விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது.

மறைந்த அமராவதி அம்மாள் உடலுக்கு சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.  அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

“வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரும் விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் தாயார் அமராவதி அம்மாள் வயது மூப்பின் காரணமாக மறைவெய்திய செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன். அவருக்கும், அவரது குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”

என்று தெரிவித்துள்ளார்.