டில்லி

த்திய அரசு தமிழகத்துக்கு  வரி பகிர்வாக ரூ.2976 கோடி விடுவித்துள்ளது.

மத்திய அரசு டிசம்பர் மாதத்திற்கான வரி பகிர்வாகத் தமிழகத்திற்கு ரூ.2,976 கோடி நிதியை சு விடுவித்துள்ளது. மொத்த, அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தமாக ரூ.72,961.21 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்துக்கு ரூ.13,088.51 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு மற்றும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, கூடுதல் தவணையை முன்கூட்டியே மத்திய அரசு விடுவித்துள்ளது.

இந்த வரி பகிர்வு நிதி ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த வரிப் பகிர்வு தீர்மானிக்கப்படுகிறது. தங்கள் முதலீடுகள் மற்றும் செலவினங்களை மாநில அரசுகள் துரிதப்படுத்தும் நோக்கில் இந்த வரிப் பகிர்ந்தளிப்பு வழங்கப்படுகிறது.