சென்னை

ன்னை பற்றி விமர்சித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வர் மு க ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

வரும் 24-ந்தேதி டெல்லியில் நடைபெற உள்ள இந்த ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை ஏற்கிறார்.  நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் டெல்லி செல்கிறார். அவரது டெல்லி பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ?.. எல்லாம் “தம்பி” படுத்தும் பாடு என்று விகர்சித்தார்.

எடப்பாடி பழனிசாமிக்கு முதல்-வர் மு.க.ஸ்டாலின் பதிலடியாக எக்ஸ் தளத்தில்,

“தமிழகத்துக்கான நியாயமான நிதி உரிமையை நிதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ம் தேதி டெல்லி செல்கிறேன். சசிகலா முதல் அமித்ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் எடப்படி பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது?

“பாஜகவுடன் கூட்டணி கிடையாது” என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் ‘புலிகேசி’யாக மாறி ‘வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற’ பழனிசாமி என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா?.

இந்த ஸ்டாலினின் கை கருப்பு சிவப்புக் கழகக் கொடியை ஏந்தும் கை!. பேரறிஞரால் தூக்கிவிடப்பட்ட கை! கலைஞரின் கரம் பற்றி நடந்த கை! எந்நாளும் உரிமைக்கொடியைத்தான் ஏந்துவேன்! ஊர்ந்து போகமாட்டேன்!

இன்றைக்குக் கூட, தமிழகத்தின் உரிமைக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன். கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன்! தமிழகத்துக்கான நிதியைப் போராடிப் பெறுவேன்.”

என்று பதிவிட்டுள்ளார்.