சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் பரவல் அதிகரித்து வருகிறது. வெகுவாக குறைந்து வந்த கொரோனா கடந்த 15 நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இதற்கு தேர்தல் பொதுக்கூட்டங்கள் மற்றும் மக்கள் முகக்கவசம் அணியாததே காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் டாஸ்மாக் மதுபான கடைகளும் காரணமாக சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர், தேர்தல் மற்றும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் எனவும் அவரச வழக்காக விசாரிக்கக் கோரி  சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்தார்.

இதுகுறித்து, மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.