சென்னை:

கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என்ற கருத்தை வாபஸ் பெறுவதாக  சென்னை உயர்நீதி மன்றம் அறிவித்து உள்ளது.

கிறிஸ்தவ மிஷினரியைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் மீது  34 மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை கிறிஸ்தவ கல்லூரி பேராசிரியர்  தொடர்ந்த வழக்கின் விசாரணையின்போது, நீதிபதிகள் கிறிஸ்தவ மிஷனரிகள் மீது கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், நன்னெறியை போதிக்கிறதா என்றால்…  அது மில்லியன் டாலர் கேள்வி  என்றும், பெண் மாணவிகளின்  பெற்றோர்கள் கிறிஸ்தவ நிறுவனங்களில் இணை கல்வி படிப்பை மிகவும் பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள்,  கிறிஸ்தவ மிஷனரீஸ் கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்றும் கருத்து தெரிவித்தனர்.

இதற்கு கிறிஸ்தவ நிறுவனங்களில் இருந்து அதிருப்தி எழுந்தது. கிறிஸ்தவ மிஷனரியின் முறையீட்டை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், கிறிஸ்தவ நிறுவனங்களில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் கட்டாய மதமாற்றம் குறித்த கருத்துக்களை  வாபஸ் பெற்றுவதாக தெரிவித்து உள்ளது.