சென்னை:

துக்ளக் வார இதழின் 47 வது ஆண்டுவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கும்  “துக்ளக்” சோ ராமசாமிக்கும் இடையேயான நட்பை பற்றி பேசினார்.

 

“சோ இல்லாத மேடை சோ இல்லாத இந்த மேடையில் உரையாற்ற வேண்டி வரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த பொழுது சோவை மருத்துவமையில் சென்று பார்த்தார். அப்பொழுது அவர் நான் இருக்கிற வரைக்கும் நீங்க இருக்கணும் என்று  சோவிடம் கேட்டுக்கொண்டார்

அவர் கூறியது மாதிரியே ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை சோவும் உயிரோடு இருந்தார். அவர் மறைந்த உடன் சில மணி நேரங்களில் மறைந்து விட்டார்” என்று உருக்கத்துடன் பேசினார் ரஜினிகாந்த்.