சேலம்:
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுனர் உட்பட மூவர் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியில் இயங்கி வருகிறது சேகர் டிரான்போர்ட் தனியார் பேருந்து. நேற்று இரவு கடைசி ட்ரிப் சென்று வழக்கம் போல நாராயணம்பாளத்தில் பேருந்து நின்றது. அனைத்து பயணிகளும் இறங்கிச் சென்றுவிட்ட நிலையில், 15 வயது மதிக்கத் தக்க சிறுமி அழுதுகொண்டே பேருந்தில் இருந்தார். அவரை ஓட்டுனர் மணிவண்ணன், முருகன் மற்றும் பெருமாள் ஆகிய மூவர் விசாரித்தனர்.

வீட்டைவிட்டு ஓடிவந்துவிட்டதாக சிறுமி சொல்லி அழுதிருக்கிறார். அவரை மூவரும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.

சிறுமி அழுதுகொண்டே பேருந்தைவிட்டு வெளியே ஓடி வந்திருக்கிறார். அப்போது அந்தப்பக்கம் வந்த பொதுமக்கள் சிலர் சிறுமியிடம் விபரம் கேட்டிருக்கிறார்கள். சிறுமி, நடந்ததைச் சொல்லி அழுதிருக்கிறார்கள்.
இதையடுத்து ஓட்டுனர் உட்பட மூவரையும் பிடித்த பொதுமக்கள் ஓமலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் சேலம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.