சென்னை: ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின்கீழ் வரும்  15, 16-ந் தேதிகளில் 4 மாவட்டங்களில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஆய்வு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி சேலம் உள்பட 4 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

கள ஆய்வில் முதலமைச்சர்’ வேலூர் ராணிப்பேட்டை , திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்ட ஆட்சியர் மற்றும்  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய  முதலமைச்சர், முறையான விளக்கம் அளிக்காத மாவட்ட ஆட்சியர் உள்பட அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து நடவடக்கை எடுத்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், வரும் 15 மற்றும் 16ந்தேதிகளில் அடுத்த 4 மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆய்வு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கள ஆய்வின்போது, மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள், தேவையான திட்டங்கள் குறித்து திடீர் கள ஆய்வு மேற்கொள்வதுடன், அ னைத்து துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து  ஆய்வு செய்கிறார்

அதன்படி, சேலம் மண்டலத்திற்குட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறும் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் வருகிற 15 மற்றும் 16-ந் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம்  செல்கிறார்.

சேலம் மாவட்டத்தில் நடக்கும் இக்கூட்டத்தில், 4 மாவட்டங்களைச் சேர்ந்த கலெக்டர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபடுகிறார். இதனையடுத்து, இக்கூட்டத்தில் விவாதிக்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் கடந்த 2021-22-ம் ஆண்டு மற்றும் நடப்பு 2022-23-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், நிதி ஒதுக்கீடு குறித்து விவரங்கள் அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது. இவற்றை ஒவ்வொரு ஒன்றியம் மற்றும் தாலுகா வாரியாக, அனுப்பும்படி முதலமைச்சரின் தனிச்செயலாளர் உதயசந்திரன், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். இதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.