சென்னை: அமேசான் நிறுவனத்தின் சென்னை அலுவலகம் பிரமாண்டமான முறையில் பெருங்குடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

பெருங்குடியில் உள்ள  உலக வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரபல ஆன்லைன் நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் மிகப்பெரிய அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அலவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்து, அந்நிறுவன பணியாளர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

அமேசான் நிறுவனத்துக்கு இத்துடன் தமிழகத்தில்  4-வது அலுவலகம் அமைந்துள்ளது. 8.3 லட்சம் சதுர பரப்பில் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது இந்த பிரமாண்டமான அலுவலகம் 6000 பேர் பணிபுரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.