சென்னை:
சென்னையில் மழைநீர் அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி மேற்கொண்டு வரக்கூடிய, மழைநீர் அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

சென்னை மாநகராட்சி பேரிடர் கட்டுப்பாடு மையத்திலும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.