சென்னை:  12 மாவட்ட சிறைகளில் கட்டப்பட்ட அடையாள அணிவகுப்பு அறைகளுக்கான கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,  சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள் இன்று திறக்கப்பட்டது. அதன்படி,  மாவட்ட சிறைகளில் கட்டப்பட்ட சோதனை மற்றும் அடையாள அணிவகுப்பு அறைகளுக்கான கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.12 மாவட்டங்களில் ரூ.2.51 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.