சென்னை:  
சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ  “நம்மை காக்கும் 48” புதிய திட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த  சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில், தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று நம்மைக் காக்கும் 48 என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். இதில், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான சிகிச்சை செலவை அரசே ஏற்கும் என அதில் அறிவித்துள்ளார்.