சென்னை:
சென்னை, காவேரி மருத்துவமனையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் பணியின்போது உடல்சோர்வு ஏற்பட்டதால், அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா உறுதியானது. இதையடுத்து, அவர் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இது தொடர்பாக டிவிட்டும் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சென்னை, காவேரி மருத்துவமனையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மருத்துவ நிர்வாகம் வெளியிட்ட தகவலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா அறிகுறிகள் தொடர்பான பரிசோதனைகள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.