சென்னை:
றைந்த ஆர்.கே.நகர் கிழக்குப்பகுதி திமுக பொறுப்பாளருக்கு  முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை ஆர்.கே.நகர் கிழக்குப்பகுதி திமுக பொறுப்பாளராக இருந்தவர் சுந்தரராஜன்.  இவருக்கு வயது 67.
கடந்த 26ம் தேதி பாரிமுனை ராஜாஜி சாலையில்  பைக்கில் சென்றபோது, சுந்தரராஜனுக்கு திடீரென உயர்த்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சுந்தரராஜனின் மறைந்த தகவலறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தண்டையார்பேட்டை தாண்டவராயன் கிராமணி தெருவில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்.