சென்னை: முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித்தலைவர் உள்பட அரசு பணியாற்றுபவர்கள் தேர்தல் பரப்புரை செய்ய தடை செய்ய கோரி  சென்னை உயர்நீதி மன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை உயர்நிதிமன்றத்தில் அரசு சம்பளம் பெறுவோர் தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கக்கூடாது என பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில், அரசு பதவி வகிக்கும் முதல்வர், அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும், அவர் அரசு சம்பளம் பெறுவதால் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் எனவும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்களா என கண்காணிக்க எந்த நடைமுறையும் இல்லாததால் பரப்புரை செய்ய அனுமத்திக்ககூடாது  என கூறப்பட்டுள்ளது.

இந்த மனுமீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.