சென்னை: இடைத்தேர்தல் நடைபெறும்  ஈரோடு கிழக்கு தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள நிலையில், அவரது சுற்றுப்பயண திட்டம் சிறிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

27ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில், 24, 25 ஆகிய இரு நாட்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் மேற்கொள்கிறார். வெள்ளி, சனி ஆகிய  2 நாட்கள் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்ய முதலில் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த பிரசார சுற்றுப்பயணத்தில் இப்போது மாற்றம் செய்யப்பட்டு. அதன்படி சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் பிரசாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, நாளை  மாலை விமானம் மூலம் கோவை செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் ஈரோடு சென்று சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். அங்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொகுதியின் பொறுப்பு அமைச்சர்களை சந்தித்து தொகுதி நிலவரங்களை கேட்டறிகிறார். மறுநாள் சனிக்கிழமை காலையில் வீதி வீதியாக சென்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 25-ந்தேதி வாக்கு சேகரிக்கிறார்.

அவரது தேர்தல் சுற்றுப்பயண விவரம் :  சனிக்கிழமை காலை 1. சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்படுகிறார். பேசும் இடம்-சம்பத் நகர் (காலை 9 மணி), வழி- பெரிய வலசு, பாரதி தியேட்டர், சக்தி ரோடு, பஸ் நிலையம், மெட்ராஸ் ஓட்டல், மஜீத் வீதி. 2. பேசும் இடம்-காந்தி சிலை (காலை 10 மணி), வழி-கே.என்.கே. ரோடு, மூலப்பட்டறை, பவானி ரோடு. 3. பேசும் இடம்-அக்ரஹாரம் (காலை 11 மணி), வழி- பூம்புகார் நகர், காந்தி நகர், வில்லரசம்பட்டி. சக்தி சுகர்ஸ் (தங்குதல்) மதியம் சக்தி சுகர்ஸ், சம்பத் நகர், அம்மு மெஸ் பிரிவு, சின்னமுத்து வீதி, பேசும் இடம்-முனிசிபல் காலனி (தலைவர் சிலை) (மாலை 3 மணி) வழி-மேட்டூர் ரோடு, பன்னீர்செல்வம் பூங்கா. பெரியார் நகர் (மாலை 3.45) அதன்பிறகு சக்தி சுகர்ஸ் சென்றுவிட்டு கோவை வழியாக சென்னை திரும்புகிறார்.