சென்னை: அரசினர் தொழிற்பயிற்சி நிலைய கட்டிடம் திறப்பு மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் புதிய வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் புதிய வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். நகராட்சி தலைவர்கள், ஆணையர்கள், பொறியாளர்கள் பயன்பாட்டிற்காக 187 வாகனங்களை முதலமைச்சர் வழங்கினார். புதிய வாகனங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து கொடியசைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நகராட்சி தலைவர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் பொறியாளர்களின் அலுவலகப் பயன்பாட்டிற்காக ரூ. 23.66 கோடி மதிப்பிலான 187 புதிய வாகனங்களை வழங்கிடும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நகராட்சி தலைவர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் பொறியாளர்களின் அலுவலகப் பயன்பாட்டிற்காக ரூ. 23.66 கோடி மதிப்பிலான 187 புதிய வாகனங்களை வழங்கிடும் வகையில் அதற்கான சாவிகளை நகரமன்றத் தலைவர்களிடம்  முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் ரூ. 29.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை  முதலமைச்சர் ஸ்டாலின்  திறந்து வைத்தார்.