சென்னை: பிளஸ்2 தேர்ச்சி பெற்று கல்லூரிகளுக்கு செல்லும் மாணாக்கர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் இன்று காலை பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதையடுத்து, தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில், பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாகஎ  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும்! இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள் முன்னேற்றத்துக்கான துணையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள்! என்று தெரிவித்துள்ளார்.

7லட்சத்து 50ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்2 தேர்வில், தமிழில்100க்கு 100 எடுத்த மாணவர்கள் எத்தனை பேர்?