திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் புதிதாகத் திறக்கப்பட்ட கடையில் சிக்கின் பிரியாணி ரூ.50 விற்பனை செய்யப்பட்டதால் அதை வாங்க  நுற்றுக்கணக்கான மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் புதிதாகக் கொங்கு மெஸ் என்ற உணவகம் இன்று திறக்கப்பட்டது. துவக்க விழா சலுகையாக சிக்கன் பிரியாணி ரூ.50 என்றும் மட்டன் பிரியாணி ரூ.100க்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையறிந்து பிரியாணி வாங்கவாங்க  நூற்றுக்கணக்கான அந்த கடையின் முன்பு மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.