சென்னை

டுத்த 2 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதில், ”அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.  அதாவது தஞ்சை, அரியலூர், நாமக்கல், நெல்லை, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நீலகிரி, கோவை, ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது

நாளை (04-10-2021) புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தவிர கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது” எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.