சென்னை

மிக்ஜம் புயல் அச்சுறுத்தல் காரணமாகச் சென்னை மெரினா கடற்கரை மூடப்பட்டு பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மிக்ஜம் எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது.மிக்ஜம் புயல் சென்னையில் இருந்து 290 கி.மீ. தென்கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது.   அந்த புய; தற்போது 5 கிலோ மீட்டர் வேகத்தில் \ நகர்ந்து வருகிறது.

இது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி வடமேற்கு திசையில் நகர்ந்து, பின் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே 5 ஆம் தேதி மாலை கரையைக் கடக்க உள்ளது. இந்த ‘மிக்ஜம்’ புயல் கரையைக் கடக்கும்போது 110 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை இன்று மாலை முதல் படிப்படியாக அதிகரித்து நாளை மாலை வரை கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த புயல் நாளை மதியம் வட தமிழக கடற்கரையோரம் நகர்ந்து அதன் பிறகு ஆந்திர கடற்கரையை நோக்கி செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் முன்னெச்சரிக்கை நடவடி க்கையாகச் சென்னை மெரினா கடற்கரை மூடப்பட்டு காவல்துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மிக்ஜம் புயல் கரையைக் கடக்கும் வரை மெரினா கடற்கரையின் இணைப்பு சாலையில் செல்ல பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  கடற்கரையில் கூடும் மக்களை காவல்துறையினர் வெளியேற்றி வருகின்றனர்.