சென்னை

நான்கு மாநிலச் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கட்சிகளுக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று நடந்த மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்படி பாஜக 3 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 4 மாநில தேர்தல்களில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலச் சட்டசபைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு வாழ்த்துகள்.

அனைத்து தரப்பு மக்களுக்கும் சாதகமான மாற்றம், முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஏற்படும் வகையிலான சிறப்பான ஆட்சி அமைய வாழ்த்துகிறேன்.”

என்று வாழ்த்தி உள்ளார்.