டில்லி

நான்கு மாநில தேர்தல் முடிவுகள் தற்காலிக பின்னடைவு எனக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கருத்து தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டம் எனப் பலராலும் கருதப்படும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிக்க உள்ளது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக அதிக இடங்களில் வென்று ஆட்சி அமைக்க உள்ளது.

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ”இந்த தற்காலிக பின்னடைவை எதிர்கொண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முழுமையான அளவில் தயாராவோம். தெலுங்கானாவில் மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.