மும்பை

டைபெற்று முடிந்த மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளின் தாக்கம் நாடாளுமன்ற தேர்தலில் இருக்காது என சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.

இன்று நடந்த மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்படி பாஜக 3 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது.

இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செ யல் தலைவர் சுப்ரியா சுலே செய்தியாளர்களிடம்,

“நாடாளுமன்றத் தேர்தலும், சட்டசபைத் தேர்தலும், வேறு வேறானவை. சட்டசபைத் தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூற முடியாது.  

கடந்த 2019-ல், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால் மக்களவை தேர்தல் முடிவுகள் வேறு விதமாக அமைந்தன. 

தற்போதைய சூழலை வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது. யார் சிறப்பாகச் செயல்பட்டாலும், அவர்களை நாம் வாழ்த்த வேண்டும். தற்போதைய சூழல் பா.ஜ.க.வுக்கு சாதகமாக உள்ளது. அவர்களின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.” 

என்று தெரிவித்துள்ளார்.