டில்லி

வரும் 6 ஆம் தேதி அன்று இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய  5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஷ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் மட்டும் தற்போது வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே நடக்க இருந்த ‘இந்தியா’ கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் சட்டப்பேரவை தேர்தல் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அடுத்த ஆலோசனைக் கூட்டம் வருகிற 6-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ‘இந்தியா’ கூட்டணி தலைவர்களுக்குக் கடிதம் மூலமாக இதைத் தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.